
ஆஸ்திரேலியாவில் 'ப்ராகிள்' என்று பெயரிடப்பட்ட தாய் டால்பின், உயிரிழந்த தனது குட்டியை கடலில் மூழ்கவிடாமல் பல நாட்கள் முதுகில் சுமந்து நீந்திய நெகிழ்ச்சியான காட்சி பதிவாகியுள்ளது.
கடல் ஆய்வு அமைப்பின் தகவல்படி, இந்த தாய் டால்பின் ஏற்கனவே தனது நான்கு குட்டிகளை இழந்துள்ள நிலையில், இந்த குட்டியும் பிறந்த சில காலத்திலேயே உயிரிழந்துள்ளது.
டால்பின்கள் வலுவான சமூக உறவுகளைக் கொண்டவை என்பதால், உயிரிழந்த குட்டியை உடனடியாகப் பிரியாமல் தாய் டால்பின்கள் சுமந்து செல்லும் நடத்தை அறிவியல் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.