
தெற்கு இங்கிலாந்தின் லூயிஸ் நகருக்கு அருகே 150 பயணிகளுடன் சென்ற ரயில் தடம் புரண்ட விபத்தில் 3 பெட்டிகள் கவிழ்ந்ததில் 11 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:54 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 3 மணி நேரத்திற்குள் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்தைத் தொடர்ந்து லூயிஸ் மற்றும் ஈஸ்ட்போர்ன் இடையிலான முக்கிய ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.