
மதுரை சிந்தாமணி காவல் நிலையத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிவனடியார் பரமசிவம் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 16-ஆம் தேதி உயிரிழந்தார்.
பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள் அளித்த புகாரின்படி, ஜூலை 19-ஆம் தேதி ஆய்வாளர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நான்கு காவலர்கள் அவரை பூட்ஸ் காலால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மூலம் விசாரணை நடத்தவும், தடயவியல் நிபுணர்கள் குழுவைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யவும், காவல் நிலைய சிசிடிவி குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.