
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில், சீருடையில் மது அருந்திய 12-ம் வகுப்பு மாணவிகள் மீது பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியான நிலையில், தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் வடசேரி அரசுப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.