
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தனது நாடு போரை விரும்புவதில்லை என்றும், ஆனால் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து துணிச்சலாகப் போராடும் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை ஈரான் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானிய மக்களின் உரிமைகளைக் காக்கும் அரணாகத் தனது அரசு திகழும் என அதிபர் உறுதியளித்துள்ளார்.