
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது முந்தைய காதல் உறவால் ஏற்பட்ட மன அழுத்தம், பதற்றம் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
காதல் முறிவால் ஏற்பட்ட மன உளைச்சலால் கண் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால துணையிடம் மன்னிப்பை விட நடத்தையில் வரும் மாற்றத்தையே எதிர்பார்ப்பதாகவும், வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.