
தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், வாகனங்களுக்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் அதிகரித்துள்ளது.
திண்டிவனம், கிருஷ்ணகிரி, சமயபுரம் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வால் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் வரை உயரும் என்றும், காலாவதியான 30 சுங்கச்சாவடிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாசலம் வலியுறுத்தியுள்ளார்.