
சிவகாசியில் பட்டாசு தொழிலை முடக்குவதாகக் கூறி தவெக அரசுக்கு எதிராக திமுக விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முறையாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் தொழிலை முடக்குவது நியாயமற்றது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.
ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்களிலேயே தவெக அரசு தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.