
கடந்த 25 ஆண்டுகளில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளின் வளர்ச்சியைத் தடுக்க, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கல்வித்துறைக்குக் குறைந்தது 3 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததே மாணவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.