
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராஜா மீதும், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பேசிய சேகர்பாபு மீதும், கள்ளக்குறிச்சியில் பேசிய வசந்தம் கார்த்திகேயன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும் அனைத்து கட்சியினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.