
கொல்கட்டாவில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில், சி.ஐ.எஸ்.எப். அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மோகன் பகான் காலிறுதிக்கு முன்னேறியது.
மோகன் பகான் வீரர் சஹால் அப்துல் சமத் 17, 19 மற்றும் 37-வது நிமிடங்களில் கோல் அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
ஏ பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மோகன் பகான் மற்றும் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்த ஈஸ்ட் பெங்கால் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.