டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் நேற்று மதியம் 1:30 மணியளவில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், கட்டிட உரிமையாளர் ஹரிராம் குப்தா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்த கட்டிடத்திற்கு அருகில் பழுதடைந்த நிலையில் உள்ள மற்றொரு கட்டிடத்தை 3 நாட்களுக்குள் இடிக்க உரிமையாளருக்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.