
தென் ஆப்பிரிக்காவின் மேற்கு கேப் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று மற்றொரு பஸ் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பின்னால் வந்த வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.