கனடாவின் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோ பகுதிகளில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
டொராண்டோவில் ஒரே இரவில் 150 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது ஆகஸ்ட் மாதத்தின் சராசரி மழையளவான 78 மில்லி மீட்டரை விட இரு மடங்கு அதிகம்.
நகர மேலாளர் பால் ஜான்சன் இதனை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் புயல் என குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது மீட்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.