
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான டாலர் தேவையால் ரூபாய் மதிப்பு சரிந்த நிலையில், அதைத் தடுக்க கடந்த 24-ம் தேதி மட்டும் 7 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்துள்ளது.
இந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மேலும் டாலர்களை விற்றதன் மூலம், ஒட்டுமொத்தமாக 9 பில்லியன் டாலர் (ரூ.86,000 கோடி) மதிப்பிலான அந்நியச் செலாவணி கையிருப்பில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது 676.2 பில்லியன் டாலராக (ரூ.64.65 லட்சம் கோடி) வலுவாக உள்ளதால், ரூபாயின் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.