திமுக தலைமை அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் கிளை, வார்டு மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் பதவி இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கிளை, வார்டு, பகுதி செயலாளர் பதவிகளுக்கு 45 வயது வரம்பும், ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர் பதவிகளுக்கு 60 வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 250 கிளைகளில் 150-க்கும் மேற்பட்ட கிளை செயலாளர்கள் 45 வயதைக் கடந்ததால், அவர்கள் மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.