
தன்னுடைய பழைய பள்ளியான சென்னை சாலிகிராமம் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில், தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிய 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
தாய் மொழி தெரியாமல் இருப்பது பெருமை அல்ல, அது அவமானம் என்று குறிப்பிட்ட தனுஷ், மாணவர்கள் தாய் மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெல்ஜியத்தில் படப்பிடிப்பின் போது தனக்கு ஆங்கிலம் தெரிந்ததை அவர்கள் ஆச்சரியமாகப் பார்த்ததைச் சுட்டிக்காட்டிய தனுஷ், தாய் மொழிதான் முதன்மையானது என்று மாணவர்களிடம் பேசினார்.