
மின்சார வாரியத்தின் பெயரில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எஸ்.எம்.எஸ் அனுப்பி சைபர் மோசடி நடந்து வருவதாக சைபர் கிரீம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியருக்கு வந்த போலி குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டபோது மர்ம நபர் வாட்ஸ்அப் தொடர்பில் வருமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொட்டிவாக்கம் மின்வாரிய உதவி பொறியாளரிடம் உறுதிசெய்த நபர் இணைப்பைத் துண்டித்து விட்டு 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார்.