
கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில், தொழிலாளர்களின் வேலை மற்றும் கல்வி தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தூதரக சேவை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் பங்கேற்று, தொழிலாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் தனித்தனியே வழங்கினர்.
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் இந்த முகாமில் பங்கேற்றுத் தங்களின் குறைகளைத் தெரிவித்து பயனடைந்தனர்.