
IPO-க்களில் முதலீடு செய்வது எளிதான லாபத்தைத் தரும் என்று நம்பும் முதலீட்டாளர்களுக்கு, ஜீரோதா இணை நிறுவனர் நிதின் காமத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் 74 முதல் 80 சதவீத IPO-க்கள் வெளியீட்டு விலையை விட உயர்வாகப் பட்டியலிடப்பட்டாலும், அவற்றில் பெரும்பான்மையானவை பெரிய லாபத்தை வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 26 சதவீத பங்குகள் வெளியீட்டு விலையை விடக் குறைவான விலையிலேயே சந்தைக்கு வந்துள்ளதாகவும், அதிக வரவேற்பு உள்ள IPO-க்களில் பங்குகள் ஒதுக்கீடு கிடைப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.