
பெங்களூருவில் உள்ள சிறப்பு கிரிக்கெட் பயிற்சி மையத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய கிரிக்கெட்டின் முழுமையான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் இயக்குநராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டால், இந்திய அணியின் நீண்டகால திட்டமிடல், வீரர்களின் வளர்ச்சி மற்றும் தேர்வுக்குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்ற பணிகளை லக்ஷ்மன் கவனிப்பார்.
லக்ஷ்மனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டாலும், கவுதம் கம்பீரின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு உடனடி பாதிப்பு இருக்காது என வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.