
சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் உள்ள 25.16 ஏக்கர் நிலத்தில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்பட உள்ளது.
சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 தளங்களுடன் அமையவுள்ள இந்த வளாகத்திற்காக, வீட்டு வசதி வாரியம் மற்றும் மாநகராட்சி நிலங்களை வழங்க இசைவு தெரிவித்துள்ளன.
தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடியால் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தை மாற்ற, முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி இந்தத் திட்டத்தை அறிவித்திருந்தார்.