
புகைப்பட கலைஞர் அஷ்ரப் கொடைக்கானல் காட்டில் தங்க மரத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் எதிர்கொள்ளும் மர்மங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
அஷ்ரப் கதையின் நாயகனாக நடிப்பதோடு இயக்கத்தையும் கவனித்துள்ளார், கருணாகரன் மற்றும் உறியடி சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரயீஷ் அஹ்மத் ஒளிப்பதிவிலும், ராஜ்குமார் சந்திரசேகரனின் இசையிலும் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரைக்கதையாக இப்படம் அமைந்துள்ளது.