
திருப்பூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் சரவணன் (41), ஒன்பது மற்றும் 10-ம் வகுப்பு மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியர் தலைமை ஆசிரியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், சைல்டு லைன் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்திய பிறகு கே.வி.ஆர்.நகர் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் மாணவியரிடம் ஒருமையில் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.