
படப்பிடிப்பு தளத்தில் தனது கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, உதவி இயக்குநர் ஒருவர் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து தனது மார்பில் காஜல் அகர்வாலின் பெயரை டாட்டூவாகக் குத்தியிருந்ததைக் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரன்பீர் கபூரின் ‘ராமாயணா’ மற்றும் பாலகிருஷ்ணாவின் 111-வது படம் ஆகியவற்றில் நடித்து வரும் காஜல் அகர்வால், இந்த முறையற்ற செயலை சட்டரீதியாகத் தவறு என எச்சரித்து அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
ரசிகராக இருந்தாலும் ஒரு பெண் தனியாக இருக்கும்போது அனுமதி இன்றி கேரவனுக்குள் நுழைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காஜல் அகர்வால் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.