
ஹார்முஸ் நீரிணையில் சென்ற அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ADNOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் வர்த்தக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.