
நைஜீரியாவின் சாபரா மாகாணத்தில் பாதுகாப்புப்படையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மொத்தம் 29 பேர் உயிரிழந்தனர்.
இந்த மோதலில் 10 பாதுகாப்புப்படையினர், 17 ஆயுதக்குழுவினர் மற்றும் 2 பொதுமக்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைக்குகளில் சென்ற 200-க்கும் மேற்பட்ட ஆயுதக்குழுவினர் மீது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்திய நிலையில், தப்பிச்சென்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.