சென்னையில் பருவமழைக்கு முன்பாகவே எச்1என்1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை உயர்ந்துள்ளது.
தினமும் 3 முதல் 4 நோயாளிகள் தீவிர பாதிப்புடன் சிகிச்சைக்காக வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆன்டிவைரல் மருந்துகளை இருப்பு வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், முகக்கவசம் அணிந்து கை சுகாதாரத்தைப் பேணவும் பொதுமக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.