/nakkheeran/media/media_files/2026/09/15/e-2026-09-15-18-26-42.jpg)
பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவை தனி நாடாக இயங்கவும், பொது வாக்கெடுப்பு நடத்தவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் தனி நாடுகளாகவும், வடக்கு அயர்லாந்து அயர்லாந்து குடியரசுடன் இணையவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.
சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சித்தலைவர்கள் ஒரே நேரத்தில் ஆட்சியில் இருப்பது இதுவே முதல் முறை என்பதுடன், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.