
வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற பழங்களை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இரவில் இத்தகைய பழங்களை உண்பது சிலருக்கு வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் தூக்கமின்மை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும்.
செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவில் பழங்கள் உண்பதற்கு முன் மருத்துவரை அணுகுவதுடன், இரவு உணவுக்கும் பழங்களுக்கும் இடையே போதிய இடைவெளி விடுவது நல்லது.