
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் ஆடாதோடை மணப்பாகு ஆகியவற்றை இணைத்துக் கொடுப்பது சித்த மருத்துவத்தில் வழக்கில் உள்ளது.
பப்பாளி இலைச்சாறு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்றாலும், அதை 10 முதல் 20 மில்லி அளவுக்கு மட்டுமே குடிக்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் குடிக்கலாம் எனினும், சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகி ரத்தத் தட்டணுக்களைக் கண்காணிப்பது அவசியமாகும்.