
நிதி நெருக்கடியில் தவித்துவரும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு ரூ.35,000 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ரூ.25,000 கோடி நேரடி கடனாகவும், ரூ.10,000 கோடி வங்கி உத்தரவாதம் உள்ளிட்ட நிதி சாராத வசதிகளாகவும் வழங்கப்படவுள்ளன.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி வோடபோன் ஐடியா பங்கு விலை சுமார் 2 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.