
நடிகர் தனுஷ் தான் பத்தாம் வகுப்பு வரை படித்த சென்னை சாலிகிராமம் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில், தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
தனுஷ் பிளாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில் தனுஷின் சகோதரிகள் மற்றும் 1999-ம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியின் மற்ற கட்டிடங்களைச் சீரமைக்கவும், காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டிடங்களைக் கட்டவும் தனுஷ் முன்வந்துள்ளதாக ஒளிப்பதிவாளர் குமரன் தெரிவித்துள்ளார்.