
திருவொற்றியூர் அரசு பள்ளி மாணவர் தனுஷ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 11 சிறுவர்கள் உட்பட 12 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பள்ளி வளாகத்தில் கஞ்சா புகைத்ததை தட்டிக்கேட்ட முன்விரோதம் காரணமாக, 16 வயது மாணவர் தனுஷ் பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட 11 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியிலும், 18 வயது தியாகராஜன் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளதாக திருவொற்றியூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.