
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுற்றியுள்ள அனைத்துக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு மாடி வீடு மட்டும் உறுதியாக நின்றது.
நீரோட்டத்தின் திசை மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் மற்றும் சுவர்கள் தரமாக அமைக்கப்பட்டதே அந்த வீடு தப்பியதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி, வீட்டை வடிவமைத்த இன்ஜினியரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.