
சர்வதேச டி-20 பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி 278-வது இடத்திலிருந்து 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வே தொடரில் 2 அரைசதங்கள் உட்பட 151 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றதன் மூலம் வைபவ் 536 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 801 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார், விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.