
கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஹிமான்ஷி குரானா என்ற இந்தியப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் அப்துல் கபூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் கபூரி, 7 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில், சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டு கனடாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
ஹிமான்ஷி குரானா வீட்டில் பிணமாகக் கிடந்ததையடுத்து, அவர் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு டொராண்டோ காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.