
ஜப்பானின் குமாமாட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
நிலநடுக்கத்தால் 46,000 வீடுகளில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, மக்கள் கடுமையான வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர்.
உசி மற்றும் ஹிகாவா மாகாணங்களில் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.