
திருநெல்வேலி மாவட்டம் மேலஇலந்தகுளத்தில் 4 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆபிரகாம் (47) என்பவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022-ம் ஆண்டு ஊழியத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட 8, 12, 13 வயது சிறுமிகள் உட்பட 4 பேரை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி சுரேஷ்குமார், திருநெல்வேலியில் இதுவரை 4 பேருக்கு இச்சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.