
பெங்களூருவில் நடைபெற்ற துலீப் கோப்பை காலிறுதி ஆட்டத்தில், வடகிழக்கு மண்டல அணியை இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் கிழக்கு மண்டல அணி வீழ்த்தியது.
கிழக்கு மண்டல அணியின் ஷபாஸ் அகமது 167 ரன்களும், சுதீப் குமார் கராமி 146 ரன்களும் குவித்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 467 ஆக உயர்த்தினர்.
பந்துவீச்சில் அசத்திய அபிஜித் சர்க்கார் 5 விக்கெட்டுகளையும், அனுகுல் ராய் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.