
ஜல்லிக்கட்டை இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என சட்டப்பேரவையில் விமர்சித்த சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை இழிவுபடுத்திய கருப்பையா, அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு நிதி கோருவதற்காக இத்தகைய கருத்துகளைக் கூறியது கண்டனத்திற்குரியது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
மதுக்கடைகளை மூடத் துணிவில்லாதவர்கள், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைச் சீரழிவு என்று கூறுவது அறியாமையின் உச்சம் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.