
திருடப்பட்ட தங்க நகைகளை மீண்டும் விற்பனை செய்வதைத் தடுக்க, ஒவ்வொரு நகைக்கும் வழங்கப்படும் 6 இலக்க HUID எண்ணை ஆன்லைனில் 'விற்பனையானது' எனப் பதிவு செய்யும் முறையை மத்திய அரசு கொண்டுவருகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நகையின் HUID எண்ணைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் விற்க முடியாது.
முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள நகைக்கடைகளில் இதைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இது வரி ஏய்ப்பு மற்றும் திருட்டு நகைகளைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.