
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிப்பால், பாகிஸ்தான் எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அரசு வாகனங்கள் வாங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்பட்டுளது.
திருமண நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்றும், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடும் நேரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.