
மதுரையில் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
9 நாட்களாக உடலை வாங்க மறுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.