
ஆசிய பீச் கபடி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரிஜேந்திர சிங் சவுத்ரி, ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட 'பிரின்ஜோலமைடு' என்ற மருந்தை பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சோதனை மையம் வெளியிட்ட தகவலின்படி, தனது தவறை ஒப்புக்கொண்ட பிரிஜேந்திர சிங் மீது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.