
கடந்த ஐந்து மாத கால மோதல்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவதை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தானும் ஈரானிடம் இழப்பீடு கோருவதாக அறிவித்துள்ளார்.
சுலைமானியின் வழிகாட்டுதல் மற்றும் யூ.எஸ்.எஸ் கோல் போர்க்கப்பல் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த இழப்பீட்டை கோருவதாக டிரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் கொன்ற ஆயிரக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தனது பிரதிநிதிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.