
இந்தியாவில் அதிகரித்து வரும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி தனது அரசு பத்திரங்களை விற்பனை செய்து வங்கிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடியை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
நாட்டின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2 முதல் 6 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய பத்திரங்களின் விலை சரிந்து காணப்பட்டதுடன், 2036-ஆம் ஆண்டில் முதிர்வடையும் பத்திரத்தின் மீதான வருவாய் 7.09 சதவீதமாக உயர்ந்தது.