
வினியோக இடர்பாடுகள் காரணமாக சவுதி அரேபியாவின் 'அராம்கோ' நிறுவனம் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வினியோகத்தை நிறுத்தியுள்ளது.
கிழக்கு - மேற்கு எண்ணெய் குழாயில் நடந்த ட்ரோன் தாக்குதலும், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து பாதிப்பும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10,300 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் மாற்று கொள்முதலுக்கான செலவு அதிகரிக்கக்கூடும்.