
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடர் வரும் அக்டோபர் 3 முதல் 18 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான லீக் போட்டி அக்டோபர் 10 அன்று துபாயில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.