
மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான மோதலைத் தொடர்ந்து நீட்டிக்க விரும்பவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
சீனா சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, பீஜிங்கில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தங்கள் உரிமைகளைப் பாதுகாத்தபடி தூதரக வழியில் தீர்வு காணத் தயாராக உள்ளதாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.